என் மலர்
உள்ளூர் செய்திகள்

மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி சாவு
- போலீசார் விசாரணை
- அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை
திருவண்ணாமலை:
விழுப்புரம் மாவட்டம் தேவனூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம் என்பவரின் மகன் பொன் முடி (வயது 33), கட்டிட தொழிலாளி.
இவர் வெறையூர் அருகே அண்டம்பள்ளம் கிராமத்தில் வீடு கட்டும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி பொன் முடி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் வெறையூர் போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோத ைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து போலீசார் வழக் குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






