search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு
    X

    வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு

    • தரிசு நிலத்தை விவசாய நிலமாக மாற்ற சோதனை
    • அதிகாரிகள் உடன் இருந்தனர்

    செங்கம்:

    செங்கம் ஒன்றியத்திற்குட்பட்ட பாலியப்பட்டு, பீமானந்தல் பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சியை திட்டப் பணிகளை கலெக்டர் முருகேஷ் ஆய்வு செய்தார்.

    மேல்பெண்ணாத்தூர் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் சாலை பணிகளை குறித்தும் ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து செங்கம் அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்தார்.

    அப்போது செங்கம் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள உள்கட்டமைப்புகள், தாய்-சேய் விடுதிகள், பிரசவ வார்டுகள், ஆய்வகங்கள் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது தாசில்தார் முனுசாமி, மருத்துவ அலுவலர் (பொ) சவுத்ரி, கிராம நிர்வாக அலுவலர் விஜயகுமார் உடனிருந்தனர்.

    இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து புதுப்பாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட பனை ஓலைப்பாடி, காரப்பட்டு, காஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.

    அப்போது காஞ்சி அருகே வேளாண்மை துறை சார்பில் தரிசு நிலத்தில் உள்ள முள்வேலிகளை அகற்றி விவசாய நிலமாக மாற்றும் திட்டம் குறித்து ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×