search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செண்பகத்தோப்பு அணை சாலை சேறும், சகதியுமாக அவலம்
    X

    செண்பகத்தோப்பு அணை சாலை சேறும், சகதியுமாக அவலம்

    • மாணவர்கள்- சுற்றுலா பயணிகள் அவதி
    • நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அடுத்த படவேடு ஜவ்வாதுமலை அடிவாரத்தில் கமண்டல நதியில் குறுக்கே கட்டப்பட்டுள்ள செண்பகத்தோப்பு அணைக்குசெல்லும் சாலை ராமநாதபுரம் கிராமம் வழியாக செல்கிறது.

    ராமநாதபுரம் கிராமத்திலிருந்து தொடங்கும் சுமார் 4 கிலோமீட்டர் சாலை வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. சாலையை ஒன்றியம் அல்லது ஊராட்சி சார்பில் சீரமைக்க முடியவில்லை.

    இதனால் இச்சாலை முழுவதும் தற்போது பெய்து வரும் தொடர் மழையால் சேறும் சகதியுமாக அவல நிலையாக உள்ளது. சீரமைக்க வனத்துறையினர் ஒப்புதல் பெற வேண்டிய நிலை உள்ளதால், கிட்டத்தட்ட போக்குவரத்துக்கு இடையூறு தரும் சாலையாக உள்ளது.

    விடுமுறை தினங்களில் செண்பகத்தோப்பு அணைக்கு ஏராளமான இளைஞர்கள், பொதுமக்கள் அணையை பார்த்து ரசித்து செல்கின்றனர். ஆனால் அணைக்கு வரும் சாலை மிகவும் மோசமாக உள்ளதால் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் உள்ளது என தற்போது செண்பகத்தோப்பு அணைக்கு சுற்றுலா பயணிகள் செல்வது குறைந்து வருகிறது.

    இந்த சாலையில் ஜவ்வாதுமலை வாழ் மக்கள், பெருமாள்பேட்டை துரிஞ்சாபுரம் பகுதி பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் பொதுமக்கள் போக்குவரத்திற்கு மிகவும் சிரமமாக இருக்கிறது.

    பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்லும் ஆட்டோவும் போகமுடியாத சூழல் நிலவுகிறது.

    வனத்துறை, ஊராட்சி நிர்வாகம் தனி கவனம் செலுத்தி சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், இளைஞர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    Next Story
    ×