search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவண்ணாமலையில் நாளை ஆருத்ரா தரிசன விழா
    X

    பிரதோஷத்தையொட்டி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், வந்தவாசி ஜலகண்ேடஸ்வரர் கோவில், கண்ணமஙகலம் கொளத்தூர் கோவிலில் நந்திக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

    திருவண்ணாமலையில் நாளை ஆருத்ரா தரிசன விழா

    • உத்திராயண புண்ணியகால கொடியேற்றமும் நடக்கிறது
    • பக்தர்களுக்கு மகா தீப மை வழங்கப்படுகிறது

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயில் நாளை காலை 10 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசனம் நடைபெற உள்ளது.

    இதனை முன்னிட்டு நடராஜர் நாளை விடியற்காலை 3 மணி அளவில் ஆயிரம் கால் மண்டபத்தில் எழுந்தருளி அங்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளிப்பார். பின்பு கார்த்திகை தீபத் திருவிழாவின் போது மலை மீது ஏற்றப்பட்ட தீப மை நடராஜருக்கு வைக்கப்பட்டு பின்பு பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்படும். தொடர்ந்து தெற்கு திருமஞ்சனம் கோபுரம் வழியாக நடராஜர் வெளியே வந்து மாடவீதி உலா நடைபெறும்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் உத்திராயண புண்ணியகால பிரம்மோற்சவ விழா நாளை தொடங்குகிறது. இதனை தொடர்ந்து 10 நாள் விழா நாளை காலை 5.30 மணிக்கு மேல் 7.00 மணிக்குள் சாமி சன்னதி முன்பு தங்க கொடி மரத்தில் கொடியேற்று விழா நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து காலை மாலை இருவேளையும் சாமி மாட வீதி உலா நடைபெறுகின்றன.

    தொடர்ந்து 10ஆம் நாள் மாட்டுப்பொங்கல் அன்று காலை 6:15 மணிக்கு அண்ணாமலையார் ராஜகோபுரம் அருகே உள்ள திட்டிவாசல் வழியாக சூரிய பகவானுக்கு காட்சி கொடுப்பார். தொடர்ந்து இரவு திருவூடல் நிகழ்ச்சியும் நடைபெறும்.

    Next Story
    ×