என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மாடு விடும் விழாவில் காளை மிதித்து முதியவர் சாவு
- சிகிச்சை பலனின்றி பரிதாபம்
- வழக்குப்பதிவு செய்ய வேண்டாம் என உறவினர்கள் எழுதி கொடுத்தனர்
ஆரணி:
ஆரணி அடுத்த ராட்டினமங்கலம் கிராமத்தில் கடந்த 1-ந் தேதி கிருத்திகை பெருவிழாவையொட்டி நடைபெற்ற காளை விடும் விழாவில் 300-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
காளைவிடும் விழா நடந்தபோது பார்வையாளர்களுக்காக அமைக்கப்பட்டிருந்த தடுப்பு கட்டை அருகே இருந்த ஆரணி அடுத்த அம்மாபாளையம் கிராமத்தைச் சேர்ந்த சின்னப் பையன் (வயது 65) என்பவரை சீறிப்பாய்ந்த காளை மிதித்து சென்றது. இதில் சின்னப் பையன் படுகாயம் அடைந்தார்.
பின்னர் அங்கிருந்தவர்கள் முதியவரை மீட்டு 108 அவசர ஆம்புலன்சில் உதவியாளர்கள் மருத்துவ சிகிச்சைகள் வழங்கினர். மேல் சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
தீவிர சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவம னைக்கு அவரை உறவினர்கள் அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சின்னப்பையன் பரிதாபமாக இறந்தார்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய வேண்டாம் என போலீஸ் நிலையத்தில் சின்னப்பையனின் உறவினர்கள் எழுதி கொடுத்துவிட்டு உடலை சொந்த கிராமத்திற்கு எடுத்துச் சென்றதாக போலீசார் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்