search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெடி பொருள் ஏற்றி வந்த லாரி நடுரோட்டில் கவிழ்ந்தது
    X

    வெடி பொருள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து கிடந்த காட்சி.

    வெடி பொருள் ஏற்றி வந்த லாரி நடுரோட்டில் கவிழ்ந்தது

    • மின் கம்பத்தில் மோதியது
    • தீயணைப்பு துறையினர் வெடிப்பொருட்களை பத்திரமாக மீட்டனர்

    வெம்பாக்கம்:

    திருவண்ணாமலை மாவட்டம் தூசி அருகே கல்குவாரிகளுக்கு பாறைகளை வெடிக்க பயன்படுத்தும் பொருட்களான ஜெலட்டின் குச்சிகள் ஏற்றி வந்த வேன் சிப்காட் வளாக பகுதி சாலையின் நடுவே மின்விளக்கு கம்பத்தில் மோதி தலைகுப்புற கவிந்து விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் வேன் டிரைவர் செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தாலுகா சித்தாமூர் கிராமத்தை சேர்ந்த ராஜா (49) சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.

    இது குறித்து தகவல் அறிந்து தூசி போலீசார் மற்றும் செய்யார் தீயணைப்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வெடிப்பொருட்களை பத்திரமாக மீட்டனர்.

    பின்னர் டிரைவரிடம் விசாரித்த போது செய்யார் பகுதியில் உள்ள கல்குவாரிகளுக்கு செங்கல்பட்டு தாலுகாவில் இருந்து 95 பெட்டிகளில் ரூ.2 லட்சம் மதிப்பிலான 19 ஆயிரம் ஜெலட்டின் குச்சிகளை ஏற்றி வந்தது தெரியவந்தது.

    Next Story
    ×