search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நிதி நிறுவன அதிபரை கடத்திய 6 பேர் கைது
    X

    நிதி நிறுவன அதிபரை கடத்திய 6 பேர் கைது

    • கடன் தர மறுத்ததால் ஆத்திரம்
    • கடத்தலுக்கு பயன்படுத்திய கார் பறிமுதல்

    செய்யாறு:

    திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுக்கா நாட்டேரி கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 45), இவர் தனது மைத்துனர் சுரேஷ், உறவினர் வடிவேலு ஆகியோர் இணைந்து அசனமாபேட்டை கூட்ரோட்டில் நிதி நிறுவனம் நடத்தி வருகின்றனர்.

    கடத்தி தாக்குதல்

    கடந்த 24-ந் தேதி இரவு பணிகளை முடித்துக் கொண்டு ராமச்சந்திரன் வீட்டிற்கு தென்னம்பட்டு வழியாக சென்று கொண்டு இருந்தார். அப்போது பின்னால் காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் ராமச்சந்திரனை சர மாரியாக தாக்கி காருக்குள் இழுத்து போட்டு கடத்திச் சென்றனர்.

    காரில் இருந்த நபர்கள் ராமச்சந்திரன் தம்பி ரவிச்சந்திரன் க்கு போன் செய்து உங்கள் அண்ணனை கடத்தி உள்ளோம் அவரை உயிரோடு விட வேண்டும் என்றால் ரூ.30 லட்சம் தர வேண்டும் என்றும் எப்போது எங்கே தர வேண்டும் என மீண்டும் போன் செய்கிறோம் என கூறிவிட்டு போன சுவிட்ச் ஆப் செய்துள்ளனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த ரவிச்சந்திரன் பிரம்மதேசம் போலீசில் புகார் செய்தார்.பிரம்மதேசம் புதூர் கூட்ரோட்டில் நேற்று முன்தினம் காலை 8 மணிய ளவில் கடத்தப்பட்டதாக கூறப்ப ட்ட ராமச்சந்திரனை அந்த கும்பல் இறக்கிவிட்டுள்ளனர்.

    ராமச்சந்திரன் இடமிருந்து 50,000 பணத்தையும்3 சவரன் தங்கச் செயினையும் கடத்தல் கும்பல் பறித்துச் சென்றதாக கூறப்படுகிறது.இது குறித்து தகவல் அறிந்த டிஎஸ்பி வெங்கடேசன், தூசி இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் இது குறித்து விசாரணை நடத்தினர்.

    கடன் தரமறுப்பு

    இதில் கடந்த ஓராண்டுக்கு முன்பு ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த மாமண்டூர் கிராமத்தை சேர்ந்த பிரபாகரன் (31)என்பவர் பைனான்ஸில் கடனாக பணம் கேட்டதற்கு ராமச்சந்திரன் பணம் தர முடியாது என அசிங்கமாக பேசி அனுப்பி உள்ளார்.

    இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது தெரியவந்தது. இதனால் பிரபாகரனை பிடித்து விசாரித்தனர்.

    இதில் முன் விரோதத்தை மனதில் வைத்துக் கொண்டு ராமச்சந்திரனை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்று நினைத்த பிரபாகரன் தனது நண்பர்களான மாமண்டூர் கிராமத்தை சேர்ந்த ரமேஷ் (37) சிறு கரும்பூர் ராஜேந்திரன் பிரசாத் (27), காஞ்சிபுரம் தாலுக்கா தாமல் கிராமத்தை சேர்ந்த விக்னேஷ் (24), தமிழரசன் (37) ஆகியோர் ஒன்று சேர்ந்து ராமச்சந்திரனை கடத்தி தாக்கியது தெரியவந்தது.

    பொய்கைநல்லூரை சேர்ந்த மோகன்ராஜ் என்பவரது காரை கடத்தலுக்கு பயன்படுத்தி உள்ளனர்.

    தனிப்படை போலீசார் பிரபாகரன், ரமேஷ், ராஜேந்திர பிரசாத், விக்னேஷ், தமிழரசன், உடந்தையாக இருந்த கார் டிரைவர்மோகன்ராஜ் உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

    கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.ஆள் கடத்தல் வழக்கை துரித நடவடிக்கை எடுத்த டிஎஸ்பி வெங்கடேசன் உள்ளிட்ட தனிப்படை போலீசாரை எஸ்.பி. கார்த்திகேயன் பாராட்டியுள்ளார்.

    Next Story
    ×