search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீடு புகுந்து 15 பவுன் நகை, பணம் கொள்ளை
    X

    வீடு புகுந்து 15 பவுன் நகை, பணம் கொள்ளை

    • வீட்டின் பூட்டை உடைத்து துணிகரம்
    • கேமராக்கள் ஆய்வு

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை காந்தி நகர் 6-வது தெருவை சேர்ந்தவர் கலாவதி (வயது 57). இவருடைய கணவர் ஜெயராமன் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது சொந்த ஊரான வந்தவாசியில் மரணமடைந்தார். இதனால் கலாவதி வீட்டை பூட்டி விட்டு வந்தவாசி சென்றார்.

    இதனைப் பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள் கலாவதியின் வீட்டின் முன்பக்க கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.

    அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 15 பவுன் தங்க நகைகள் மற்றும் 25 ஆயிரம் பணம் ஆகியவற்றை கொள்ளை யடித்து சென்று விட்டனர். வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து கலாவதிக்கு தகவல் தெரிவித்தனர்.

    அவர் வந்து பார்த்தபோது வீட்டில் கொள்ளை நடந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து திருவண்ணாமலை கிழக்கு போலீசில் புகார் அளித்தார்.போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கைரேகைகள் சேகரிக்கப்பட்டன.

    அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    திருவண்ணாமலை நகரப் பகுதியில் தற்போது கார்த்திகை தீப திருவிழாவையொட்டி போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு வருகிறது. தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் வீடு புகுந்து நகை கொள்ளைய டிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×