search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பாஜக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
    X

    திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பாஜக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

    • பிரவீன் வெங்கட் ஸ்ரீனிவாசன், சீனிவாசன் ஆகியோர் ஏற்பாட்டில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது
    • சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மாவட்ட தலைவர் மாநில செயற்குழு உறுப்பினர் சரவணன் பங்கேற்பு

    பொன்னேரி:

    பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையின் ஆலோசனைபடி திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் பொன்னேரி சட்டமன்ற தொகுதி வேன்பாக்கம் பகுதியில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது. பிரவீன் வெங்கட் ஸ்ரீனிவாசன், சீனிவாசன் ஆகியோர் ஏற்பாட்டில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா மூத்த நிர்வாகி பத்மநாபன் தலைமையில் நடைபெற்றது.

    பிறமொழி பிரிவு மாவட்ட தலைவர் பிரகாஷ் சர்மா மற்றும் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு பொறுப்பாளர் வினோத் ரெட்டி கலை கலாச்சார பிரிவு மாவட்ட தலைவர் பாலாஜி முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மாவட்ட தலைவர் மாநில செயற்குழு உறுப்பினர் சரவணன், உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் சோமு.ராஜசேகரன், ஆன்மீக பிரிவு மாநில செயலாளர் குமார் ஆகியோர் கலந்து கொண்டு நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு வழங்கினர். நிகழ்ச்சியில் கவிதா, விஜய்யா ஜானகி, ராஜ்குமார், பிரகாஷ், வழக்கறிஞர் நாகமணி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×