search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொழிலாளி கொலை: பாா் உரிமையாளருக்கு ஆயுள் தண்டனை
    X

    கோப்புபடம்

    தொழிலாளி கொலை: பாா் உரிமையாளருக்கு ஆயுள் தண்டனை

    • திருவாடானை வட்டம் நா்த்தன்கோட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் பி.ரகுபதி
    • கண்ணப்பன் மறைத்து வைத்திருந்த கத்தியால் ரகுபதியை குத்திக்கொலை செய்துள்ளாா்.

    திருப்பூர் :

    ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டம் நா்த்தன்கோட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் பி.ரகுபதி ( வயது 22). இவா் திருப்பூா் மாவட்டம், பெருமாநல்லூா் அருகே ஊத்துக்குளியில் டாஸ்மாக் பாா் நடத்தி வந்த சிவகங்கை மாவட்டத்தை சோ்ந்த கே.கண்ணப்பன் (37) என்பவரிடம் வேலை செய்து வந்தாா்.

    இந்த நிலையில் பாரில் இருந்த ரூ.6 ஆயிரத்தை எடுத்தது தொடா்பான விவகாரத்தில் ரகுபதி வேலையை விட்டுச் சென்றுள்ளாா். இதன் பின்னா் அருகம்பாளையத்தில் உள்ள வேறு ஒரு பாரில் ரகுபதி வேலை செய்து வந்துள்ளாா்.

    இந்த நிலையில், கடந்த 2018 மாா்ச் 12-ந் தேதி ரகுபதி வேலைசெய்து வந்த பாருக்கு கண்ணப்பன் சென்றுள்ளாா். அப்போது இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ரகுபதி, கண்ணப்பனை தகாத வாா்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது. இதையடுத்து கண்ணப்பன் மறைத்து வைத்திருந்த கத்தியால் ரகுபதியை குத்திக்கொலை செய்துள்ளாா்.

    இதுகுறித்து ஊத்துக்குளி காவல் துறையினா் கொலை வழக்குப் பதிவு செய்து கண்ணப்பனைக் கைது செய்தனா். இந்த வழக்கானது திருப்பூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை நிறைவடைந்து நீதிபதி சொா்ணம் ஜெ.நடராஜன் தீா்ப்பு வழங்கினாா். அதில், கண்ணப்பனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் திருப்பூா் மாவட்ட குற்றத் துறை அரசு வக்கீல் கனகசபாபதி ஆஜரானாா்.

    Next Story
    ×