search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்லடத்தில் மறுசீராய்வு செய்யப்பட்ட வரிவசூல் செய்யும் பணி தொடங்கியது
    X

    பல்லடத்தில் பொதுமக்கள் வரி செலுத்திய போது எடுத்த படம்.

    பல்லடத்தில் மறுசீராய்வு செய்யப்பட்ட வரிவசூல் செய்யும் பணி தொடங்கியது

    • 1,800 சதுர அடிக்கு உட்பட்ட கட்டடத்துக்கு 75 சதவீதம் மற்றும் இதற்கு மேல் உள்ள கட்டடங்களுக்கு100 சதவீதம் உயர்த்தி வரி விதிக்கப்பட உள்ளது.
    • கட்டடங்கள் அளவீடு செய்யும் பணிகள் நடைபெற்றது.

    பல்லடம் :

    தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில், மறுசீராய்வு செய்யப்பட்ட புதிய சொத்து வரி உயர்வு அமல்படுத்தப்படும் என அரசு அறிவித்தது. இதன்படி 600 சதுர அடிக்கு உட்பட்ட கட்டடங்களுக்கு 25 சதவீதம் ,1,200 சதுர அடிக்கு உட்பட்ட கட்டடத்துக்கு 50 சதவீதம், 1,800 சதுர அடிக்கு உட்பட்ட கட்டடத்துக்கு 75 சதவீதம் மற்றும் இதற்கு மேல் உள்ள கட்டடங்களுக்கு100 சதவீதம் உயர்த்தி வரி விதிக்கப்பட உள்ளது.

    இந்த சொத்து வரி உயர்வு குறித்து பொதுமக்கள் மத்தியில் கருத்துகள் கேட்கப்பட்டன.பெருவாரியான மக்களிடம் ஆட்சேபனை எழுந்துள்ள நிலையில், வரியை உயர்த்துவதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்றது. இந்தநிலையில் பல்லடம் நகராட்சியில் மறுசீராய்வு செய்யப்பட்ட சொத்து வரி வசூல் செய்யும் பணி தற்போது துவங்கியுள்ளது.

    இது குறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளில் 15,664 குடியிருப்புகள்,1,263 வணிக நிறுவனங்கள், 546 தொழில் கூடங்கள் மற்றும் 25 கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டவை உள்ளன.சொத்துவரி மறுசீராய்வு தொடர்பாக கட்டடங்கள் அளவீடு செய்யும் பணிகள் நடைபெற்றது.வரிகள் மறுசீராய்வு பணிகள் முழுமையாக நிறைவடைந்தது.இதன்படி உயர்த்தப்பட்ட சொத்து வரி வசூல் செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. கடந்த 2 மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்த புதிய சொத்து வரி, பெயர் மாற்றம், திருத்தம் உள்ளிட்ட பணிகளையும் தற்போது மேற்கொள்ளப்படுகிறது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×