search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடுமலையில்  ஆதரவற்ற முதியோர் இல்லத்திற்கு நலத்திட்ட உதவி-அன்னதானம்
    X

    நலத்திட்ட உதவிகள் வழங்கிய  போது எடுத்த படம்.

    உடுமலையில் ஆதரவற்ற முதியோர் இல்லத்திற்கு நலத்திட்ட உதவி-அன்னதானம்

    • ஆதரவற்ற முதியோர் காப்பகத்தில் உள்ளவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது
    • மாவட்ட தலைவர் கருப்புசாமி தலைமையில் இந்நிகழ்ச்சி நடைப்பெற்றது

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அகில இந்திய உழைப்பாளர்கள் மற்றும் ஓட்டுநர் நல சங்கம், ஆக்டிங் டிரைவர்சஸ் மற்றும் நகர சுற்றுலா வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் சார்பில் தீபாவளியை முன்னிட்டு ஆதரவற்ற முதியோர் காப்பகத்தில் உள்ளவர்களுக்கு போர்வை மற்றும் தலையணை , இனிப்புகள் , அன்னதானம் வழங்கப்பட்டது.

    அகில இந்திய உழைப்பாளர்கள் ஓட்டுநர் நல சங்கம் தலைவர் சுரேஷ்குமார் ,மாநிலத் தலைவர் தாமோதரன் ,மாநில செயலாளர் பாலசுப்பிரமணியம் அறிவுறுத்தல் படி மாவட்ட தலைவர் கருப்புசாமி தலைமையில் இந்நிகழ்ச்சி நடைப்பெற்றது. மாவட்ட செயலாளர் முத்துக்குமார், உடுமலை நகரத்தலைவர் முருகவேல் ,உடுமலை நகர செயலாளர் காஜா மைதீன், உடுமலை நகர பொருளாளர் விக்னேஷ் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×