அவினாசியில் வீடுகளில் கொள்ளையடித்த வாலிபர்களுக்கு வலைவீச்சு

கதவு பூட்டுகளை உடைத்து இருவீடுகளிலும் சேர்ந்து ரூ.90 ஆயிரம் பணத்தை மர்ம ஆசாமிகள் திருடி சென்றனர்.அவினாசி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ள வாலிபரின் உருவம். 
சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ள வாலிபரின் உருவம். 
Published on

அவினாசி :

அவினாசி ஒன்றியம் பழங்கரை கமிட்டியார் காலனியில் ஓய்வு பெற்ற நில அளவையாளர் சாமிநாதன், அதே பகுதியில் அவரது மகள் கோகிலவாணி ஆகியோரது வீட்டின் கதவு பூட்டுகளை உடைத்து இருவீடுகளிலும் சேர்ந்து ரூ.90 ஆயிரம் பணத்தை மர்ம ஆசாமிகள் திருடி சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. இது குறித்து அவினாசி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் அப்பகுதியில் சி.சி.டி.வி.கேமராவை ஆய்வு செய்தபோது திருட்டு சம்பவம் நடந்த வீட்டின் காம்பவுண்டு சுவர் அருகே ஒருவர் செல்போனில் பேசிய படி திரும்பி, திரும்பி பார்த்தவாறு அங்கும் இங்கு மாக நடந்துகொண்டிருப்பது தெரியவந்தது. இரு வீடுகளும் பூட்டியிருப்பதை உளவு பார்த்து திட்டமிட்டு திருட்டு நடந்திருக்கலாம் என்றும் திருடி சென்ற நபர்களில் சி.சி.டி.வி .கேமராவில் பதிவாகியுள்ள நபரும் ஒருவராக இருக்கலாம் என்கிற சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் தனிப்படை அமைத்து கமிட்டியார் காலனி பகுதி, திருப்பூர் சுற்றுவட்டாரப்பகுதி உள்ளிட்ட பல இடங்களில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com