search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை வருவதால் வெள்ளகோவில் வாரச்சந்தை நாளை செயல்படும்
    X

    கோப்புபடம்

    ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை வருவதால் வெள்ளகோவில் வாரச்சந்தை நாளை செயல்படும்

    • தொழிலாளர்கள் தங்களுக்கு ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறி மற்றும் மளிகைப் பொருட்களை வாங்கி செல்வார்கள்.
    • தீபாவளி பண்டிகை வருவதால், நாளை (சனிக்கிழமை) வார சந்தை செயல்படும்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவிலில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நகராட்சியின் வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த வார சந்தைக்கு வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் பயிரிடப்பட்ட காய்கறி மற்றும் தானிய வகைகளை விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம்.

    இதனை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் நூல் மில்களில் தங்கி வேலை செய்து வரும் வட மாநில தொழிலாளர்கள் தங்களுக்கு ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறி மற்றும் மளிகைப் பொருட்களை வாங்கி செல்வார்கள். இந்நிலையில் வருகிற 12-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தீபாவளி பண்டிகை வருவதால், நாளை (சனிக்கிழமை) வார சந்தை செயல்படும்.

    ஆகையால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமாய் வெள்ளகோவில் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் நகர மன்ற தலைவர் மு.கனியரசி, ஆணையாளர் எஸ்.வெங்கடேஸ்வரன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×