மங்கலத்தில் வாஜ்பாய் நினைவு நாள் நிகழ்ச்சி

வாஜ்பாய் உருவ படத்திற்கு மலர்மாலை அணிவித்து மலர்தூவி நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது. பா.ஜ.க.கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
 நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்ற காட்சி. 
 நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்ற காட்சி. 
Published on

மங்கலம் :

திருப்பூர் ஒன்றியம், மங்கலம் ஊராட்சிக்குட்பட்ட அக்ரஹாரப்புத்தூர் பகுதியில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவுதினத்தை முன்னிட்டு பா.ஜ.க.திருப்பூர் தெற்கு ஒன்றியம் சார்பில் வாஜ்பாய் உருவ படத்திற்கு மலர்மாலை அணிவித்து மலர்தூவி நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது.

இதில் பா.ஜ.க.கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்ட மத்திய அரசின் நலத்திட்ட பிரிவு செயலாளர் மகேந்திரன், பா.ஜ.க. திருப்பூர் வடக்கு மாவட்ட தொழில் பிரிவு துணைத் தலைவர் ஐ.ஈ.டி.சி.விநாயகமூர்த்தி, திருப்பூர் வடக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சண்முகம்மணி, பா.ஜ.க. திருப்பூர் தெற்கு ஒன்றிய துணைத்தலைவர் ஈஸ்வரமூர்த்தி,மற்றும் நிர்வாகிகளான பொன்னுசாமி, சுப்பு,சுப்பிரமணியம், ராமு, துரை உள்பட கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com