search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா வருகிற 28-ந்தேதி தொடங்குகிறது
    X

    கோப்புபடம்.

    உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா வருகிற 28-ந்தேதி தொடங்குகிறது

    • தேர்த்திருவிழா வருகிற 28-ந் தேதி, நோன்பு சாட்டுதலுடன் துவங்குகிறது.
    • திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 13ந் தேதி நடக்கிறது.

    உடுமலை :

    உடுமலையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. நூற்றாண்டுகள் பழமையான இக்கோவில் தேர்த்திருவிழா சிறப்பாக கொண்டாட ப்பட்டு வருகிறது. நடப்பாண்டு தேர்த்திருவிழா வருகிற 28-ந் தேதி, நோன்பு சாட்டுதலுடன் துவங்குகிறது. அன்று மாலை, 4மணிக்கு அம்மனுக்கு பூச்சொரிதல் நிகழ்ச்சியும், மாலை, 6மணிக்கு நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியும் நடக்கிறது.ஏப்ரல் 4-ந் தேதி மாலை 7 மணிக்கு கம்பம் போடுதல் நிகழ்ச்சியும், 6-ந் தேதி இரவு 12மணிக்கு கிராம சாந்தி, வாஸ்து சாந்தி நிகழ்ச்சி நடக்கிறது. 7-ந் தேதி மதியம் 1 மணிக்கு கொடியேற்றுதல், மதியம் 2மணிக்கு பக்தர்கள் பூவோடு எடுத்தல் நிகழ்ச்சி தொடங்கி 11-ந் தேதி இரவு 10மணிக்கு பூவோடு எடுத்தல் நிறைவு பெறுகிறது. 12ந் தேதி அதிகாலை 4மணிக்கு மாவிளக்கு, மாலை 3 மணிக்கு அம்மன் திருக்கல்யாணம் நடக்கிறது.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 13ந் தேதி நடக்கிறது. அன்று காலை 6:45 மணிக்கு அம்மன் திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும், மாலை 4மணிக்கு தேரோ ட்டமும் நடக்கிறது.14-ந் தேதி காலை 8 மணிக்கு ஊஞ்சல் உற்சவம், இரவு 8 மணிக்கு பரிவேட்டை, இரவு 11 மணிக்கு வான வேடிக்கை நிகழ்சிகள் நடக்கிறது.15ந்தேதி காலை 8:15 மணிக்கு கொடியிறக்கம், காலை 11மணிக்கு மகா அபிேஷகம், பகல் 12மணிக்கு மஞ்சள் நீராட்டம், மாலை 7மணிக்கு பூப்பல்லக்கில் அம்மன் திருவீதி உலா நடக்கிறது.

    திருவிழா காலங்களில் ஏப்ரல் 7-ந் தேதி முதல் தினமும் இரவு 7 மணிக்கு அம்பாள் புஷ்ப அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா நிகழ்ச்சிகளும், கோவில் வளாகம் மற்றும் குட்டை திடலில் ஆன்மிக கலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது.

    Next Story
    ×