search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடுமலை அரசு கலைக்கல்லூரியில் 2-ம் கட்ட கலந்தாய்வு 27-ந்தேதி நடக்கிறது
    X
    கோப்புபடம்.

    உடுமலை அரசு கலைக்கல்லூரியில் 2-ம் கட்ட கலந்தாய்வு 27-ந்தேதி நடக்கிறது

    • இளநிலை பாடப்பிரிவு மாணவர்களுக்கான சேர்க்கை கடந்த 8ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது.
    • மொத்தம் 62 இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.

    உடுமலை :

    உடுமலை அரசு கலைக் கல்லூரியில் 2022 -23 ம் கல்வி ஆண்டுக்கான இளநிலை பாடப்பிரிவு மாணவர்களுக்கான சேர்க்கை கடந்த 8ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. இளநிலை பாடப்பிரிவுகளில் மொத்தம் 864 இடங்கள் உள்ளன.

    முதல் கட்ட கலந்தாய்வில் பெரும்பான்மையான இடங்கள் நிரப்பப்பட்ட நிலையில் கலை பாடப்பிரிவுகளில் 17 இடங்கள் அறிவியல் பாடப் பிரிவுகளில் 13 இடங்கள் வணிகவியல் பாடப்பிரிவுகள் 32 இடங்கள் என மொத்தம் 62 இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. காலியாக உள்ள இடங்களுக்கான இரண்டாம் கட்ட கடந்தாய்வு வரும் 27 -ந்தேதி நடைபெற உள்ளது. இது குறித்த குறுஞ்செய்தி தரவரிசை பட்டியலின் படி ஏற்கனவே விண்ணப்பித்திருந்த மாணவர்களின் தொலைபேசி எண்ணிற்கு அனுப்பி வைக்கப்படும். எஸ்எம்எஸ். பெறப்பட்ட மாணவர்கள் மட்டும் குறிப்பிட்ட நேரத்தில் கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும்.

    ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து அசல் மற்றும் நகல் சான்றிதழ்கள், 6 போட்டோக்கள் கொண்டு வர வேண்டும். மேற்கண்டவாறு கல்லூரி முதல்வர் சோ. கி.கல்யாணி தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×