சாலையில் கான்கிரீட் கலவை சிந்திய லாரிக்கு அபராதம்

கான்கிரீட் கலவை சிந்திய லாரி நிறுவனத்திற்கு ரூ. 6 ஆயிரம் அபராதம் விதித்தனர்.கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

பல்லடம்:

பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் பெருந்தொழுவு நால்ரோடு பகுதியில் கான்கிரீட் கலவை கொண்டு சென்ற லாரியிலிருந்து ஏராளமான கான்கிரீட் கலவைகள் சாலையில் கொட்டியது. இதனை தொடர்ந்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் லாரியை சிறை பிடித்தனர். இதுகுறித்து அவினாசிபாளையம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விதிமுறைகளை மீறி சாலையில் கான்கிரீட் கலவை சிந்திய லாரி நிறுவனத்திற்கு ரூ. 6 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேற்கொண்டு இதுபோன்று நடைபெற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com