திருப்பூர் மாவட்டத்தில் 8 தாசில்தார்கள் அதிரடி இடமாற்றம் - கலெக்டர் வினீத் நடவடிக்கை

வருவாய்த் துறையில் நிர்வாக காரணங்களுக்காக தாசில்தார்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.தாராபுரம் சமூக பாதுகாப்பு திட்ட தனித்தாசில்தாராக சைலஜா மாற்றப்பட்டுள்ளார்.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

திருப்பூர் :

திருப்பூர் வருவாய்த் துறையில் நிர்வாக காரணங்களுக்காக8 தாசில்தார்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.அதன்படி, திருப்பூர்இந்து சமய அறநிலையத்துறைஉதவியாளர் அலுவலகதனி தாசில்தாராக இருந்தகோபாலகிருஷ்ணன், திருப்பூர் வடக்கு தாசில்தாராகவும், வடக்கு தாசில்தாராக பணியாற்றி வந்த கனகராஜ் இந்து சமய அறநிலை ய துறை உதவியாளர் அலுவலக தனிதாசில்தாராகவும், தாராபுரம் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராக பணியாற்றி வந்த தங்கவேலு,ஊத்துக்குளி தாசில்தாராகவும், ஊத்துக்குளி தாசில்தாராக பணியாற்றி வந்த சைலஜா, தாராபுரம் சமூக பாதுகாப்பு திட்ட தனித்தாசில்தாராகவும் மாற்றப்பட்டுள்ளார்.

இதுபோல் திருப்பூர் டாஸ்மாக் கிடங்குமேலாளராக பணியாற்றிவந்த செல்வி, மடத்துக்குளம் தாசில்தாராகவும்,மடத்துக்குளம் தாசில்தாராக பணியாற்றி வந்த சபாபதி டாஸ்மாக் கிடங்கு மேலாளராகவும், உடுமலை ஆர்.டி.ஓ.வின் நேர்முக உதவியாளராக பணியாற்றி வந்தவிவேகானந்தன் உடுமலைசமூக பாதுகாப்பு திட்டதனிதாசில்தாராகவும், உடுமலை சமூகப் பாதுகாப்புதிட்ட தனி தாசில்தாராக பணியாற்றி வந்த ஜலஜா,உடுமலை ஆர்டிஓ. வின்நேர்முக உதவியாளராகவும்பணியிட மாற்றம் செய்து மாவட்ட கலெக்டர் வினீத்உத்தரவிட்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com