என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நகையை மீட்க சுழற்சி முறையில் அடகு கடையை கண்காணிக்கும் வாடிக்கையாளர்கள்
- நகைகளை அடகு வைத்திருந்த வாடிக்கையாளர்கள் 50-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டு கடையை முற்றுகையிட்டனர்.
- வாடிக்கையாளர்களுக்கு சொந்தமான நகை அருகில் உள்ள தனியார் வங்கி லாக்கரில் இருப்பதாகவும் வாடிக்கையாளர்களிடம் திருப்பி கொடுப்பதாகவும் உறுதி அளித்தார்.
அனுப்பர்பாளையம் :
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை அடுத்த இடையபட்டி பகுதியைச் சேர்ந்தவர் சதீஸ். இவர்திருப்பூர் பி.என்.ரோடு போயம்பாளையம்- பொம்மநாயக்கன்பாளையம் சாலையில் நகை அடகு கடை நடத்தி வந்தார். அங்கு சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் சுமார் 200 பவுன் நகைகளை அடகு வைத்திருந்தனர்.
இந்த நிலையில் தீபாவளி விடுமுறைக்கு சொந்த ஊருக்கு சென்ற சதீஸ் பின்னர் திரும்பி வரவில்லை. கடந்த 2 மாதங்களாக அவருக்கு சொந்தமான நகை அடகு கடை பூட்டியே இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்கள் சதீஸ் செல்போனுக்கு தொடர்பு கொண்டு உள்ளனர்.
ஆனால் அவர் போனை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக வாடிக்கையாளர்களுக்கு மேலும் சந்தேகம் ஏற்பட்டது. இந்த நிலையில் போயம்பாளையத்திற்கு வந்த சதீஸ் அவருடைய கடையை திறந்துள்ளார்.
இதுபற்றி தகவலறிந்ததும் சம்பந்தப்பட்ட நகை அடகு கடையில் நகைகளை அடகு வைத்திருந்த வாடிக்கையாளர்கள் 50-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டு கடையை முற்றுகையிட்டனர்.
மேலும் கடை உரிமையாளர் சதீஸிடம் தங்களுடைய நகைகளை வழங்குமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த அனுப்பர்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது கடை உரிமையாளர் சதீஸ், வாடிக்கையாளர்களுக்கு சொந்தமான நகை அருகில் உள்ள தனியார் வங்கி லாக்கரில் இருப்பதாகவும், அதை நாளை (திங்கட்கிழமை) வாங்கி அந்தந்த வாடிக்கையாளர்களிடம் திருப்பி கொடுப்பதாகவும் உறுதி அளித்தார். மேலும் வங்கியில் உள்ள நகையை மீட்பதற்கான பணம் தன்னிடம் இருப்பதாக கூறி, அந்த பணத்தையும் வாடிக்கையாளர்கள் மற்றும் போலீசாரிடம் சதீஸ் காட்டி உள்ளார். இதனால் திருப்தி அடைந்த வாடிக்கையாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். ஆனாலும் திங்கட்கிழமை வரை வாடிக்கையாளர்களில் தலா 4 பேர் சுழற்சி முறையில் அங்கேயே இருந்து கடையை கண்காணிக்கவும் முடிவு செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்