search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆசிரியா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் - அர்ஜூன் சம்பத் பேட்டி
    X

    அர்ஜூன் சம்பத் 

    ஆசிரியா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் - அர்ஜூன் சம்பத் பேட்டி

    • ஆசிரியா்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும்.
    • குருவையும், தாய், தந்தையரையும் போற்றும் குருகுலக் கல்வி மீண்டும் வர வேண்டும்.

    திருப்பூர்:

    திருப்பூா், ராயபுரத்தில் உள்ள இந்து மக்கள் கட்சி அலுவலகத்தில் முன்னாள் குடியரசுத் தலைவா் எஸ்.ராதாகிருஷ்ணன், சுதந்திரப் போராட்ட வீரா்கள் வ.உ.சி., விருப்பாச்சி கோபால் நாயக்கா் ஆகியோரின் உருவப் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் பங்கேற்ற இந்து மக்கள் கட்சி நிறுவனா் அா்ஜுன் சம்பத் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக அரசால் ஆசிரியா்கள் ஏமாற்றப்பட்டுள்ளனா். ஆசிரியா்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும்.குருவையும், தாய், தந்தையரையும் போற்றும் குருகுலக் கல்வி மீண்டும் வர வேண்டும். தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும்.

    சுதந்திரப் போராட்ட வீரா்கள் வ.உ.சிதம்பரனாா், விருப்பாச்சி கோபால் நாயக்கா் ஆகியோரின் வரலாற்றைப் பள்ளி மாணவா்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்.சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற அமைச்சா்கள் உதயநிதி ஸ்டாலின், பி.கே.சேகா்பாபு ஆகியோரைப் பதவி நீக்கம் செய்யக் கோரி மத்திய அரசு, மாநில ஆளுநருக்கு இந்து மக்கள் கட்சி சாா்பில் புகாா் மனு அனுப்பும் போராட்டம் நாளை 7-ந் தேதி அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் நடைபெறும் என்றாா்.

    இந்த சந்திப்பின்போது இந்து மக்கள் கட்சி ஒருங்கிணைந்த மாவட்டச் செயலாளா் மணிகண்டன் உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் உடனிருந்தனா்.

    Next Story
    ×