திருப்பூர் தாசில்தார்கள் துணை கலெக்டராக பதவி உயர்வு

தாசில்தாராக பணியாற்றிய 22 பேருக்கு துணை கலெக்டராக பதவி உயர்வு வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது.பதவி உயர்வு உத்தரவை அரசு செயலாளர் ராஜாராமன் பிறப்பித்துள்ளார்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

திருப்பூர்:

தமிழகத்தில் தாசில்தாராக பணியாற்றிய 22 பேருக்கு துணை கலெக்டராக பதவி உயர்வு வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் தாசில்தாராக இருந்த ராஜகோபால் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன துணை கலெக்டராகவும் (நிலம் எடுப்பு), திருப்பூரில் தாசில்தாராக இருந்த முத்துராமன் சென்னை நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய உதவி செயலாளராகவும் (குடியிருப்புகள்), திருப்பூரில் தாசில்தாராக இருந்த கிருஷ்ணவேணி கடலூர் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளராகவும் (நிலம் எடுப்பு) நியமிக்கப்பட்டுள்ளனர்.இதற்கான உத்தரவை அரசு செயலாளர் ராஜாராமன் பிறப்பித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com