search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காந்திநகர் ஏ.வி.பி., பள்ளியில் புலிகள் பாதுகாப்பு தின நிகழ்ச்சி
    X

    புலிகள் பாதுகாப்பு தின நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களை படத்தில் காணலாம்.

    காந்திநகர் ஏ.வி.பி., பள்ளியில் புலிகள் பாதுகாப்பு தின நிகழ்ச்சி

    • சர்வதேச புலிகள் பாதுகாப்பு தினம் கொண்டாடப்பட்டது.
    • சிறப்பு விருந்தினர் புலிகள் பாதுகாப்பு குறித்து சிறப்புரையாற்றினார்.

    திருப்பூர் :

    திருப்பூர் காந்திநகர் பகுதியில் அமைந்துள்ள ஏ.வி.பி. டிரஸ்ட் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளியில் சர்வதேச புலிகள் பாதுகாப்பு தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியை ஏ.வி.பி. கல்வி குழுமங்களின் தாளாளர் கார்த்திக்கேயன் தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக ரோட்டரி கிளப் ரவீந்திரன் காமாட்சி கலந்து கொண்டார். பள்ளி முதல்வர் பிரமோதினி சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார்.

    சிறப்பு விருந்தினருக்கு பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் மோகனா மரியாதை செலுத்தி வரவேற்றார். சிறப்பு விருந்தினர் புலிகள் பாதுகாப்பு குறித்து சிறப்புரையாற்றினார்.

    Next Story
    ×