search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விசைத்தறி பொது பயன்பாட்டு மையத்தை அடுத்த ஆண்டு  செயல்பாட்டுக்கு கொண்டு வர திட்டம்
    X

    கோப்புபடம்.

    விசைத்தறி பொது பயன்பாட்டு மையத்தை அடுத்த ஆண்டு செயல்பாட்டுக்கு கொண்டு வர திட்டம்

    • கோவை, திருப்பூர் மாவட்டங்களில் விசைத்தறிகள் மூலம் தினசரி ஒரு கோடி மீட்டர் காடா துணிகள் உற்பத்தி ஆகின்றன.
    • மத்திய, மாநில அரசுகளின் மானியம் 14 கோடி என 21 கோடி ரூபாய் மதிப்பீடு செய்யப்பட்டது.

    திருப்பூர் :

    கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 2 லட்சத்து க்கும் அதிகமான விசைத்தறிகள் மூலம் தினசரி ஒரு கோடி மீட்டர் காடா துணிகள் உற்பத்தி ஆகின்றன. இவை வட மாநிலங்களில் மதிப்பு கூட்டு பொருளாக மாற்றப்பட்டு விற்பனைக்கு செல்கின்றன.

    துணிகளை மதிப்பு கூட்டுவதற்கு தேவையான கட்டமைப்பு வசதிகள் இங்கு இல்லாததால் வடமாநில ங்களை நம்பியே விசைத்தறி யாளர்கள் உள்ளனர். இது குறித்து திருப்பூர் மற்றும் கோவை மாவட்ட விசைத்தறி சங்க செயலாளர் பாலசுப்ர மணியம் கூறியதாவது:-

    விசைத்தறி தொழிலை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல கடந்த 2016ல் பொது பயன்பாட்டு மையம் அமைக்க திட்ட அறிக்கை தயாரிக்கப்ப ட்டது.விசைத்தறியாளர் சார்பில் 2 கோடி ரூபாய், வங்கி சார்பில் 3.5 கோடி, எந்திரங்களுக்கான மானியம் 1.5 கோடி மற்றும் மத்திய, மாநில அரசுகளின் மானியம் 14 கோடி என 21 கோடி ரூபாய் மதிப்பீடு செய்ய ப்பட்டது.

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கேத்தனூரில் அமைய உள்ள பொது பயன்பாட்டு மையத்தில் நவீன சைசிங் மில், துணிகள் பிளீச்சிங் செய்யும் எந்திர ங்கள், பிரின்டிங் யூனிட் அமையும் என்பதால் துணிகளை மதிப்பு கூட்டு பொருளாக்கி விற்பனைக்கு கொண்டு செல்ல முடியும். இதில் 60க்கும் மேற்பட்ட விசைத்தறியாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். வருகிற 2024ல் மையத்தை முழுமையான செயல்பா ட்டுக்கு கொண்டுவர திட்டமிட்டு ள்ளோம். இதனால் விசைத்தறி மற்றும் இது சார்ந்த தொழில்கள் முன்னேற்ற மடையும். இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×