search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நொய்யல் ஆறு கரையை அழகுபடுத்துவது குறித்து ஆலோசனை
    X

    நொய்யல் ஆறு.


    நொய்யல் ஆறு கரையை அழகுபடுத்துவது குறித்து ஆலோசனை

    • ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர், துணை மேயர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    • தன்னார்வலர்கள் பங்களிப்போடு நொய்யல் கரையோரத்தை அழகுபடுத்தும் பணிகளை மேற்கொள்ளாட உள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நொய்யல் ஆற்றின் இருகரைகளும் மேம்படுத்த திட்டமிடப்பட்டு முதற்கட்டமாக இருபுறமும் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் நொய்யல் ஆறு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஆற்றின் இருபுறமும் கரைகளை சீரமைப்பது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் திருப்பூர் மாநகராட்சி மைய அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

    மேயர் தினேஷ்குமார் தலைமை தாங்கினார். ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர், துணை மேயர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகர துணை பொறியாளர் வாசுகுமார் மற்றும் தனியார் நிறுவன பிரதிநிதி உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

    நொய்யல் ஆற்றின் கரையோரம் சிறுவர் பூங்கா, பொழுதுபோக்கு அம்சங்கள், சைக்கிள் பாதை உள்ளிட்டவை அமைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த திட்டப்பணிகளை தனியார் நிறுவனம் தயாரித்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் தன்னார்வலர்கள் பங்களிப்போடு நொய்யல் கரையோரத்தை அழகுபடுத்தும் பணிகளை மேற்கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு அதற்கான நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். விரைவில் தன்னார்வலர்களுடன் கூட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

    Next Story
    ×