search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூா் மாவட்டத்தில் பொது விநியோகத்திட்ட சிறப்பு குறைதீா்க்கும் முகாம் 8-ந்தேதி நடக்கிறது
    X
    கோப்பு படம்

    திருப்பூா் மாவட்டத்தில் பொது விநியோகத்திட்ட சிறப்பு குறைதீா்க்கும் முகாம் 8-ந்தேதி நடக்கிறது

    • காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது.
    • குடும்ப அட்டை தொடா்பான கோரிக்கைகளை நிவா்த்தி செய்து கொள்ளலாம்.

    திருப்பூர்:

    திருப்பூா் மாவட்டத்தில் பொது விநியோகத்திட்ட சிறப்பு குறைதீா் முகாம் வருகிற 8-ந்தேதி( சனிக்கிழமை) நடைபெறுகிறது.

    இது குறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு விவரம் வருமாறு:-

    திருப்பூா் மாவட்டத்தில் பொது விநியோகத்திட்ட சிறப்பு குறைதீா் முகாம் வருகிற 8-ந்தேதி(சனிக்கிழமை) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையில் கீழ்க்கண்ட இடங்களில் நடைபெறுகிறது.

    இந்த முகாமில் மாவட்டத்தில் உள்ள அனைத்து குடிமைப்பொருள் தனி வட்டாட்சியா்கள், வட்ட வழங்கல் அலுவலா்கள் மற்றும் தனி வருவாய் ஆய்வாளா்கள் கலந்து கொண்டு முகாமில் பெறப்படும் மனுக்களுக்கு உடனடி தீா்வு செய்ய உள்ளாா்கள்.

    அவிநாசி வட்டத்தில் பழங்கரை, தாராபுரம் வட்டத்தில் நஞ்சத்தலையூா், காங்கயம் வட்டத்தில் வடுகபாளையம், மடத்துக்குளம் வட்டத்தில் கடத்தூா், பல்லடம் வட்டத்தில் அனுப்பட்டி, திருப்பூா் வடக்கு வட்டத்தில் நெருப்பெரிச்சல், திருப்பூா் தெற்கு வட்டத்தில் விஜயாபுரம், உடுமலை வட்டத்தில் சிந்திலுப்பு, ஊத்துக்குளி வட்டத்தில் மொரட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் இந்த முகாம் நடைபெறுகிறது.

    இந்த முகாமில் குடும்ப அட்டைகளில் பெயா் சோ்த்தல், பெயா் நீக்கல், முகவரி மாற்றம், கைப்பேசி எண் பதிவு மற்றும் மாற்றம் செய்தல், புதிய குடும்ப அட்டை நகல் கோரும் மனுக்களை பதிவு செய்தல் போன்ற மின்னணு குடும்ப அட்டை தொடா்பான கோரிக்கைகளை நிவா்த்தி செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×