என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்
மானிய விலையில் சூரிய ஒளி மின் உற்பத்தி தகடுகள் வழங்க வேண்டும்
- பல லட்சக்கணக்கான விசைத்தறியாளர்களின் குடும்ப வாழ்வாதாரத்தை தமிழக அரசு பாதுகாக்க வேண்டும்
- பொதுக்குழு கூட்டத்திற்கு சோமனூர் சங்க துணைத்தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
மங்கலம்:
கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்களின் சோமனூர் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு சோமனூர் சங்க துணைத்தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் குமாரசாமி, துணைசெயலாளர் ஈஸ்வரன், பொருளாளர் பூபதி ஆகியோர் முன்னிலையில் கிளை சங்க பொறுப்பாளர்கள், சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
நிலுவை மின் கட்டணத்திற்கு வட்டி அபராதம் ஏதும் இல்லாமல் மின் கட்டணம் செலுத்த அரசு நடவடிக்கை எடுக்ககோரி ஒவ்வொரு விசைத்தறியாளரும் தனித்தனியாக தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்புவது , தமிழக அரசு 25 சதவீத மானிய விலையில் சூரியஒளி மின் உற்பத்தி தகடுகள் வழங்க வேண்டும்.
குறைந்த கூலியின் அடிப்படையில் தொழில் செய்து வரும் பல லட்சக்கணக்கான விசைத்தறியாளர்களின் குடும்ப வாழ்வாதாரத்தை தமிழக அரசு பாதுகாக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.






