search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பாம்புகள் - பொதுமக்கள் அதிர்ச்சி
    X

    கோப்புபடம்

    திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பாம்புகள் - பொதுமக்கள் அதிர்ச்சி

    • வனத்துறையினர் 2 பாம்புகளை பிடித்து வனப்பகுதிக்குள் விடுவதற்காக எடுத்துச் சென்றனர்.
    • று அரசு துறைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு பல்வேறு சேவைகளை பெற தினந்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள மாவட்ட கலெக்டர் பெருந்திட்ட வளாகத்தில் பல்வேறு அரசு துறைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு பல்வேறு சேவைகளை பெற தினந்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்லக்கூடிய நிலையில் அலுவலக பின்புறத்தில் பாம்புகள் ஊர்ந்து சென்றது .

    இது குறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளித்ததையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் 2 பாம்புகளை பிடித்து வனப்பகுதிக்குள் விடுவதற்காக எடுத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலக பின்புறம் பொக்லைன் மூலம் புதர்கள் அகற்றப்பட்டது.

    Next Story
    ×