search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொதுமக்கள் போராட்டம் அறிவிப்பால் சுத்தம் செய்யப்பட்ட கழிவு நீர் கால்வாய்
    X

     கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்யப்பட்ட போது எடுத்த படம்.

    பொதுமக்கள் போராட்டம் அறிவிப்பால் சுத்தம் செய்யப்பட்ட கழிவு நீர் கால்வாய்

    • நீரோடை, தற்போது கழிவுநீர் கால்வாயாக மாறிவிட்டது.
    • குடிநீர் குழாய்கள் மீதும் கழிவுநீர் செல்வதாக அப்பகுதிபொதுமக்கள் கூறியிருந்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள ஆறுமுத்தாம் பாளையம் ஊராட்சி சாய் குரு கார்டன் பகுதியில் இருந்த நீரோடை, தற்போது கழிவுநீர் கால்வாயாக மாறிவிட்டது. கழிவு நீர் கால்வாய் அருகே குடிநீர் குழாய் இணை ப்புகளும் செல்கின்றன.

    இந்த நிலையில் கழிவுநீர் கால்வாயில் அதிகப்படியான சேறு, மற்றும் சகதிகள் சேர்ந்து விட்டன. இதனால் அதன் அருகில் செல்லும் குடிநீர் குழாய்கள் மீதும் கழிவுநீர் செல்வதாக அப்பகுதிபொதுமக்கள் கூறியிருந்தனர். இந்த நிலையில் கழிவு நீர் கால்வாயை, சுத்தம் செய்யுமாறு ஆறுமுத்தாம் பாளையம்ஊராட்சி நிர்வாகத்திற்கு தொடர்ந்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்க ப்படவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று அந்தப் பகுதியில் திரண்ட பொது மக்கள் கழிவு நீர் கால்வாயை சுத்தம் செய்யாவிட்டால் ஊராட்சி மன்றஅலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக அறிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த வார்டு உறுப்பினர் முத்துக்கு மாரசாமி, பொது மக்களிடம் பேச்சுவா ர்த்தை நடத்தி அவ ர்களை சமாதா னப்படுத்தி, இது குறித்து ஊராட்சி மன்ற தலைவர் பாரதி சின்னப்பனுக்கு தகவல் அளித்தார்.

    இதையடுத்து கழிவு நீர் கால்வாய் சுத்தம் செய்வத ற்காக பொக்லைன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது. பொதும க்களின் போராட்ட அறிவி ப்பால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×