search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிரிக்கெட் போட்டிக்கான அணிகள் தேர்வு
    X

    கோப்புபடம்.

    கிரிக்கெட் போட்டிக்கான அணிகள் தேர்வு

    • ஒவ்வொரு ஆண்டும் ஆறுமுகம் சுழற்கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது.
    • விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி நாள் ஜூன் 15.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், ஒவ்வொரு ஆண்டும் ஆறுமுகம் சுழற்கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது. நடப்பாண்டுக்கான தகுதிச்சுற்று போட்டி ஜூன் இரண்டாவது வாரம் துவங்குகிறது.

    மாவட்டத்தில் உள்ள கிரிக்கெட் அணிகள் இப்போட்டியில் பங்கேற்க முடியும். ஆர்வமுள்ளவர்கள் திருப்பூர் முருகம்பாளையத்தில் செயல்படும் மாவட்ட கிரிக்கெட் சங்க அலுவலகத்தில் தங்கள் அணியை பதிவு செய்யலாம். போட்டியில் பங்கேற்பதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது. விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி நாள் ஜூன் 15. மேலும் விவரங்களுக்கு 9344207615 என்ற எண்ணில் அழைக்கலாம். இத்தகவலை மாவட்ட கிரிக்கெட் சங்க மேலாளர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×