என் மலர்
உள்ளூர் செய்திகள்

காங்கயத்தில் 1,197 போக்குவரத்து விதிமீறல் வழக்குகளில் ரூ.2¾ லட்சம் அபராதம் வசூல்
- விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்து அபராதம் வசூலிக்கின்றனர்.
- ரூ.2 லட்சத்து 71 ஆயிரம் அபராதமாக விதிக்கப்பட்டு, வசூல் செய்ப்பட்டுள்ளது
காங்கயம் :
காங்கயத்தில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போக்குவரத்து போலீசார் பஸ் நிலைய ரவுண்டானா, போலீஸ் நிலைய ரவுண்டானா, முத்தூர் பிரிவு சாலை, சென்னிமலை சாலை, திருப்பூர் சாலை, தாராபுரம் சாலை, பழையகோட்டை சாலை, அகஸ்திலிங்கம்பாளையம் பிரிவு உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்து அபராதம் வசூலிக்கின்றனர். அந்த வகையில் கடந்த மார்ச் மாதத்தில் நகரில் நடத்திய வாகன சோதனையில் குடிபோதையிலும், தலைக்கவசம் அணியாமலும், ஓட்டுனர் உரிமம் இல்லாமலும், சீருடை அணியாமல், செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டியது, அதிவேகமாக வாகனம் ஓட்டியது உட்பட, பல்வேறு விதிகளை மீறியதாக, 1,197 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.இது தொடர்பாக அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 71 ஆயிரம் அபராதமாக விதிக்கப்பட்டு, வசூல் செய்ப்பட்டுள்ளது.இந்த தகவலை காங்கயம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரன் தெரிவித்தார்.






