search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மகளிர் உரிமை திட்டத்துக்கு களப்பணி ரேஷன் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க கோரிக்கை
    X

    கோப்பு படம்.

    மகளிர் உரிமை திட்டத்துக்கு களப்பணி ரேஷன் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க கோரிக்கை

    • பொது வினியோக திட்டத்தை தமிழக அரசு, தனியார் துறையாக அறிவிக்க வேண்டும்.
    • மகளிர் உரிமை திட்டத்து க்காக, களப்பணியில் ஈடுபட்ட ரேஷன் பணியாளர்களுக்கு, ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பணியாளர் சங்க (சி.ஐ.டி.யு.,) நிர்வாகிகள் கூட்டம், சி.ஐ.டி.யு., மாவட்ட குழு அலுவலகத்தில் நடைபெற்றது. சங்க மாவட்ட தலைவர் கவுதமன் தலைமை வகித்தார்.

    கூட்டத்தில் தேர்தல் வாக்குறுதிப்படி பொது வினியோக திட்டத்தை தமிழக அரசு, தனியார் துறையாக அறிவிக்க வேண்டும். ரேஷன் பணியாளர் அனைவரையும் பி.எப்., திட்டத்தில் சேர்க்க வேண்டும். பல கூட்டுறவு சங்கங்களில் தேர்வு நிலை சிறப்பு நிலை ஊதியம் வழங்கப்படவில்லை. மாவட்டம் முழுவதும் ரேஷன் கடைகளில் தேங்கியுள்ள காலி சாக்குகளை உடனடியாக அகற்ற வேண்டும்.

    மகளிர் உரிமை திட்டத்து க்காக, களப்பணியில் ஈடுபட்ட ரேஷன் பணியாளர்களுக்கு, ஊக்கத்தொகை வழங்க வேண்டும். அனைத்து ரேஷன் கடைகளிலும் கழிப்பிட வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். காலாவதியாகாத தரமான மளிகை பொருட்களை ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

    அனைத்து பொருட்களும் 10-ந்தேதிக்குள் ரேஷன் கடைகளுக்கு சென்றடைவதை உறுதிப்படுத்த வேண்டும் என தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

    Next Story
    ×