search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆரம்ப சுகாதார மையங்களில் தற்காலிக பணிக்கு ஆட்கள் தேர்வு
    X

    கோப்புபடம்

    ஆரம்ப சுகாதார மையங்களில் தற்காலிக பணிக்கு ஆட்கள் தேர்வு

    • நேர்காணல் வருகிற 11ந் தேதி காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடக்கிறது.
    • கூடுதல் விவரங்களுக்கு 0421 224 0153 என்ற தொலை பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி ஆரம்ப சுகாதார மையங்களில் காலியாக உள்ள செவிலியர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு தற்காலிக அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படவுள்ளது.நேர்காணல் வருகிற 11ந் தேதி காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடக்கிறது.

    செவிலியர் பணியிடம் - 14 பேர் (சம்பளம் ரூ.14 ஆயிரம் ). தகுதி - பி.எஸ்சி., நர்சிங், அல்லது எ.என்.எம்., அல்லது டி.ஜி.என்.எம்., படிப்பு.

    லேப் டெக்னீஷியன் - 2 பேர். (சம்பளம் ரூ. 13 ஆயிரம் ). தகுதி - மெடிக்கல் லேப் டெக்னாலஜியில் பி.எஸ்சி., அல்லது டிப்ளமோ. மருத்துவமனை பணியாளர் - ஒருவர். (சம்பளம் 8,500 ரூபாய்). தகுதி குறைந்தபட்சம், 8ம் வகுப்பு தேர்ச்சி. கூடுதல் விவரங்களுக்கு 0421 224 0153 என்ற தொலை பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×