பள்ளிபாளையத்தில் பொதுமக்கள் சாலைமறியல்

அய்யன்கோவில் செல்லும் சாலையின் குறுக்கே இருசக்கர வாகனங்களை நிறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். கழிவுநீர் கால்வாய்க்குள் மழைநீர் செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்திய காட்சி.
சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்திய காட்சி.
Published on

மங்கலம்:

திருப்பூர் மாவட்டம் பூமலூர் ஊராட்சிக்குட்பட்ட பள்ளிபாளையம் பஸ்நிறுத்தம் பகுதியில் இருந்து கிடாதுறைபுதூர் பகுதிக்கு செல்லும் வழியில் உள்ள தார்சாலையில் நேற்று இரவு பெய்த மழையால் மழைநீரானது குளம் போல் தேங்கி நின்றது.இதனால் இரு சக்கர ,நான்கு சக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

இதனால் ஆத்திரமடைந்த பள்ளிபாளையம் மற்றும் கிடாதுறைபுதூர் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் இன்று (வியாழன்) காலை 9 மணிக்கு பள்ளிபாளையம் பகுதியில் இருந்து அய்யன்கோவில் செல்லும் சாலையின் குறுக்கே இருசக்கர வாகனங்களை நிறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது பற்றி தகவல் அறிந்து வந்த மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் மற்றும் பூமலூர் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் நடராஜன் ஆகியோர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.பின்னர் உடனடியாக பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு மழைநீர் தேங்கி நிற்காத வகையில் அப்பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய்க்குள் மழைநீர் செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.இதைத்தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com