

திருப்பூர் :
திருப்பூர் மாவட்ட வருவாய் துறையில் துணை தாசில்தார்களுக்கு பதவி உயர்வு வழங்கி தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி பல்லடம் தலைமையிடத்து துணை தாசில்தாராக இருந்த பானுமதி காங்கயம் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராகவும், பல்லடம் வட்ட வழங்கல் அதிகாரியாக இருந்த மயில்சாமி மடத்துக்குளம் சமூக பாதுகாப்பு திட்ட தனித் தாசில்தாராகவும் நியமிக்கப்பட்டு கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தரவிட்டார்.