பட்டதாரி ஆசிரியர்களுக்கும் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த வேண்டும் - தேசிய ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்

மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள, தலைமையாசிரியர் பதவிகளுக்கு பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெற உள்ளமைக்கு நன்றி.வெகு காலமாக சொந்த மாவட்டங்களுக்கு பணி மாறுதல் கிடைக்காமல் சிரமப்பட்டு வரும் ஆசிரியர்களுக்கு நல் வாய்ப்பாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

திருப்பூர்:

தேசிய ஆசிரியர் சங்கம் சார்பில் பள்ளிக்கல்வி இயக்குனருக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள, தலைமையாசிரியர் பதவிகளுக்கு பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெற உள்ளமைக்கு நன்றி. கலந்தாய்வு முடிந்த பின் உருவாகும் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர், முதுகலை ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கும் உடனடி துணை பணி மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும்.

பட்டதாரி ஆசிரியர் நிலையிலிருந்தும் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த வேண்டும். அப்போது தான் மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் கல்வி பாதிக்காது. பதவி உயர்வுக்கு பின் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கும் கடந்த முதல் தேதி அடிப்படையில் கூடுதல் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களையும் சேர்த்து கலந்தாய்வு நடத்துவதன் வாயிலாக வெகு காலமாக சொந்த மாவட்டங்களுக்கு பணி மாறுதல் கிடைக்காமல் சிரமப்பட்டு வரும் ஆசிரியர்களுக்கு நல் வாய்ப்பாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com