search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூரில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் 21-ந்தேதி நடக்கிறது
    X

    திருப்பூரில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் 21-ந்தேதி நடக்கிறது

    • வேலைவாய்ப்பு முகாமில் தனியார்துறை வேலையளிப்பவர்கள் கலந்து கொண்டு வேலை தேடுபவர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
    • முகாமிற்கு வரும் போது தங்களது பதிவில் குறைகள் கண்டறியப்பட்டால் அதனை சரி செய்து கொள்ளலாம்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் வருகிற 21ந்தேதி காலை 10.30 மணிக்கு நடக்கிறது. இது குறித்து மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- வேலைவாய்ப்பு முகாமில் தனியார்துறை வேலையளிப்பவர்கள் கலந்து கொண்டு வேலை தேடுபவர்களை தேர்வு செய்ய உள்ளனர். வேலை நாடுபவர்கள் தங்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை மற்றும் சுயவிவரக் குறிப்பு படிவத்துடன் கலந்து கொள்ளலாம். வேலை அளிப்பவர்கள் தங்களுக்கு தேவையான காலியிடங்களை நிரப்பிட தங்கள் வருகையை வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழி காட்டும் மையத்தில்முன்பதிவு செய்து கொள்ள தெரிவிக்கப்படுகிறது.

    எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் முதல் முதுநிலை பட்டதாரிகள் வரை , ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்தவர்கள் மற்றும் தையல் பயிற்சி பெற்றவர்கள் என கலந்து கொண்டு பயன் பெறலாம். மேலும் வேலை தேடுபவர்களும் வேலை அளிப்பவர்களும் https://www.tnprivatejobs.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள தெரிவிக்கப்படுகிறது.

    முகாமிற்கு வரும் போது தங்களது பதிவில் குறைகள் கண்டறியப்பட்டால் அதனை சரி செய்து கொள்ளலாம். புதுப்பித்துக் கொள்ளலாம். கூடுதல் கல்வி பதிவு செய்து கொள்ளலாம்.

    தகுதியிருப்பின் வேலை வாய்ப்பற்றோர் உதவித் தொகை விண்ணப்பம் பெற்று உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.தனியார் துறைகளில் வேலையில் சேருவதால் தங்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் ரத்து செய்யப்படாது. இந்த பணி முற்றிலும் இலவசமானது.

    மேலும் விவரங்களுக்கு 0421-2999152, 9499055944 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×