search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டிஜிட்டல்மயமாகும் தடுப்பூசி திட்டம் தமிழகம் முழுவதும் விரிவுப்படுத்த ஆயத்தப்பணிகள் தீவிரம்
    X

    கோப்பு படம்

    டிஜிட்டல்மயமாகும் தடுப்பூசி திட்டம் தமிழகம் முழுவதும் விரிவுப்படுத்த ஆயத்தப்பணிகள் தீவிரம்

    • யு- வின் என்ற மொபைல் போன் செயலியை மார்ச் மாதம் (2023) அறிமுகப்படுத்தியது.
    • யு - வின் செயலி அனைத்து மாவட்டங்களிலும் செயல்பாட்டுக்கு கொண்டு வரும் போது அனைத்து குழந்தைகளுக்கும் தடுப்பூசி தாமதமின்றி செலுத்தப்படும்.

    திருப்பூர்:

    தமிழகம் முழுவதும் இம்மாத இறுதிக்குள் குழந்தைகளுக்கான மத்திய அரசின் யு - வின் செயலி பயன்பாட்டை விரிவுபடுத்த தமிழக சுகாதாரத்துறை ஆயத்தமாகி வருகிறது.

    நோட்டில் மட்டுமே இருந்து வரும் தடுப்பூசி திட்டத்தை டிஜிட்டல்மயம் ஆக்கும் வகையில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் யு- வின் என்ற மொபைல் போன் செயலியை மார்ச் மாதம் அறிமுகப்படுத்தியது.

    கர்ப்பிணியர், குழந்தைகளுக்கான தடுப்பூசி விபரம் மற்றும் அட்டவணையை இச்செயலி மூலமாக மொபைல் போன் வாயிலாக அறிந்து கொள்ள முடியும்.

    திண்டுக்கல் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் யு - வின் செயலி இயக்கம் மே மாதம் அறிமுகமானது. மீதமுள்ள 36 மாவட்டங்களில் இம்மாதம் 31-ந்தேதிக்குள் யு - வின் செயலியை இயக்கத்துக்கு கொண்டு வர சுகாதாரத் துறை ஆயத்தமாகியுள்ளது.

    மத்திய அரசு தரப்பில் இருந்து தமிழக சுகாதாரத்துறை, அனைத்து மாவட்ட இணை இயக்குனர், சுகாதார நலப்பணிகள் துணை இயக்குனர்களுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.

    இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி குழந்தைகளுக்கு 11 வகையான தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன. குழந்தைகளுக்கு எந்த தடுப்பூசி, எந்த நாளில் செலுத்த வேண்டும் என்பதில் பெற்றோர் பலர் ஒரு வித குழப்பம் அடைகின்றனர்.மொபைல் போன் வழி நினைவூட்டல் இருந்தால் தடுப்பூசி செலுத்த முன்கூட்டியே தயாராகி விடுவர். சரியான தேதியில் செலுத்துவது சாத்தியமாகி விடும்.யு - வின் செயலி அனைத்து மாவட்டங்களிலும் செயல்பாட்டுக்கு கொண்டு வரும் போது அனைத்து குழந்தைகளுக்கும் தடுப்பூசி தாமதமின்றி செலுத்தப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×