search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடுமலை அருகே கோழிப்பண்ணையால் பொதுமக்கள் பாதிப்பு
    X

    கோப்பு படம்.

    உடுமலை அருகே கோழிப்பண்ணையால் பொதுமக்கள் பாதிப்பு

    • மாசு கட்டுப்பாட்டு வாரிய விதிகளை மீறி செயல்படும் கோழிப்பண்ணையால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது
    • இறந்த கோழிகளை அப்புறப்படுத்துவதற்கான கட்டமைப்புகளை ஏற்படுத்தவும் அறிவுறுத்தினர்.

    உடுமலை

    உடுமலை அருகே சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் வகையில் செயல்படும் கோழிப்பண்ணையை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் பொதுமக்கள் மனு கொடுத்துள்ளனர்.

    அந்த மனுவில் கூறியுள்ளதாவது:-

    குடிமங்கலம் ஒன்றியம் அணிகடவு கிராமத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரிய விதிகளை மீறி செயல்படும் கோழிப்பண்ணையால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது. பி .ஏ. பி. பாசன கால்வாய் கிராம குளம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், குடியிருப்பு அருகில் இந்த கோழி பண்ணை அமைந்துள்ளது.

    இறந்த கோழிகளை நீர் நிலைகளில் வீசுவது போன்ற செயல்களால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. இதுகுறித்து ஏற்கனவே அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கால்நடை பராமரிப்பு துறையினர் நேரில் ஆய்வு செய்து பண்ணையை சுற்றி தண்ணீர் தேங்கி நிற்பதை சரி செய்யவும் இறந்த கோழிகளை அப்புறப்படுத்துவதற்கான கட்டமைப்புகளை ஏற்படுத்தவும் அறிவுறுத்தினர்.இருந்தாலும் விதிமுறைகள் முறையாக பின்பற்ற ப்படுவதில்லை.

    எனவே மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறியுள்ளனர்.

    Next Story
    ×