திருப்பூரில் போக்குவரத்து நெரிசலை தீர்க்க போலீசார் அதிரடி நடவடிக்கை

சாலையில் வரும் பஸ்கள், பஸ் பேவுக்குள் நின்று தான் பயணிகளை ஏற்றி, இறக்கி செல்ல வேண்டும்.மாநகரத்திற்குள் கனரக வாகனங்கள் எல்லா நேரமும் வருவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகின்றன.
அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளதை படத்தில் காணலாம். 
அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளதை படத்தில் காணலாம். 
Published on

திருப்பூர் :

திருப்பூர் - அவிநாசி சாலையில், வாகன போக்கு வரத்து பல மடங்கு அதிகரித்துவிட்டது. அதற்கே ற்ப சாலை கட்டமைப்பு இருந்தாலும், சாலையோர ஆக்கிரமிப்புகள், இடையூறு களால் சாலை முழுக்க பயன்பாட்டில் இல்லை.இச்சாலையில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் அதிகள வில் பயணிக்கி ன்றன. ஆங்காங்கே பஸ் நிறுத்தம் உள்ள நிலையில் அங்கு பஸ் பேவும் அமைக்கப்ப ட்டுள்ள நிலையில், பஸ் ஓட்டுனர்கள் பலர், அங்கு பஸ்களை நிறுத்தாமல் நடு ரோட்டில் பஸ்களை நிறுத்தி, பயணிகளை ஏற்றி இறக்கி செல்வதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.இத்தகைய பிரச்சிைனயை தவிர்க்க, நெடுஞ்சாலையில் உள்ள பஸ் நிறுத்தங்களில் சாலையோரம் மட்டுமே பஸ்கள் நின்று பயணிகளை ஏற்றி இறக்கி செல்லும் வகையில் பஸ் பே என்ற கட்டமைப்பு ஏற்படுத்தப்படு கிறது.

சாலையில் வரும் பஸ்கள், பஸ் பேவுக்குள் நின்று தான் பயணிகளை ஏற்றி, இறக்கி செல்ல வேண்டும். இதன் மூலம் பஸ்சை பின் தொடர்ந்து வரும் வாகன ங்கள் தடையின்றி சாலை யை கடந்துவிடும். போக்கு வரத்து நெரிசல் தவிர்க்க ப்படும்.திருப்பூர் புஷ்பா பகுதியில் போலீசார் சார்பில், பஸ் பே அமைக்க ப்பட்டுள்ளது. ஆனால் பல பஸ் ஓட்டுனர்கள் இந்த நடைமுறையை பின்பற்றா ததால் வாகன நெரிசல் தொடர்கதையாகிறது.பஸ் ஓட்டுனர்கள், இந்த விதிமுறையை பின்பற்ற வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

திருப்பூர் மாநகரத்திற்குள் கனரக வாகனங்கள் எல்லா நேரமும் வருவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகின்றன. மேலும் காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகளும். வேலைக்கு செல்பவர்களும் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமலும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக கனரக வாகனங்கள் அனைத்து பகுதிகளிலும் அனைத்து நேரங்களிலும் வந்து கொண்டுதான் இருக்கின்றன. இதுகுறித்து பலமுறை அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றும் நடவடிக்கை எடுக்கவில்லை. தற்பொழுது தான் அதற்கான நடவடிக்கைகளை மேற்கோண்டுள்ளார்கள். வீரபாண்டி பிரிவு செக்போஸ்ட் அருகே கனரக வாகனங்கள் காலை 8 மணி முதல் 12 மணிவரையும் மாலை 4 மணி முதல் 9 மணி வரை மாநகர எல்லைக்குள் கனரக வாகனங்கள் நுழைய தடைவித்து அறிவிப்பு பதாகை வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அறிவிப்பு பதாகை கீழே இருப்பதால் கனரக வாகனங்களில் வருபவர்களுக்கு தெரியவில்லை.எனவே கனரக வாகன ஓட்டிகளுக்கு தெரியும்படி அறிவிப்பு பதாகையை வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்கள். மேலும் இதனை கடுமையாக கடைபிடித்து தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com