search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிளாஸ்டிக் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
    X

    சைக்கிள் பேரணி நடைபெற்ற காட்சி.

    பிளாஸ்டிக் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

    சித்தம்பலம் ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார் .

    பல்லடம்:

    பல்லடம் ரெயின்போ ரோட்டரி சங்கம், சித்தம்பலம் ஊராட்சி நிர்வாகம் ஆகியவைசார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுகுறித்து வலியுறுத்தி திருச்செந்தூர் வரை சைக்கிள் பயணம் நிகழ்ச்சி துவக்க விழா நடைபெற்றது. சித்தம்பலம் ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார் .திமுக மேற்கு ஒன்றிய செய லாளர் கிருஷ்ணமூர்த்தி, ரெயின்போ ரோட்டரி சங்கத் தலைவர் ஆறுமுகம், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ரோட்டரி செயலாளர் சுந்தர்ராஜன், அனைவரையும் வரவேற்றார். இந்த சைக்கிள் பயணத்தில், ராமஜெயம்(70) ,ரங்கசாமி (63) ,மகேஷ்(30) ,தரணி(19) ,ஆகிய 4 பேர் பல்லடம் அருகே உள்ள சித்தம்பலம் கிராமத்தில் இருந்து, திருச்செந்தூர் நோக்கி நேற்று புறப்பட்ட னர்.

    இவர்களில் ராமஜெயம் ஒரு சைக்கிளை ஓட்டிக் கொண்டு மற்றொரு சைக்கிளை பிடித்தபடி 2 சைக்கிள்களில் செல்கிறார். இவர்கள் சுமார் 350 கி.மீ. தூரம் பயணம் செய்து, நாளை 5ந்தேதி மாலை திருச்செந்தூர் சென்று அடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×