என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திருப்பூரில் ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 24-ந்தேதி நடக்கிறது
- திருப்பூர் மாவட்ட கலெக்டர் தலைமையில் முற்பகல் 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
- மாநகராட்சி மூலம் ஓய்வூதியம் பெறுபவர்கள் மேற்காணும் கூட்டத்தில் விண்ணப்பம் அளிக்க இயலாது என தெரிவிக்கப்படுகின்றது.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் மற்றும் ஆசியர்களுக்கான ஒய்வூதியர் குறை தீர்க்கும் கூட்டமானது திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் தலைமையில் 24.11.2022 அன்று முற்பகல் 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இக்குறை தீர்க்கும் கூட்டத்தில் ஓய்வூதிய இயக்குநர் ,சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.
அரசுத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களுக்கு சேரவேண்டிய ஓய்வூதிய மற்றும் இதர ஓய்வூதிய பணப்பலன்கள் இதுநாள் வரையில் தங்களுக்கு கிடைக்கப்பெறாமல் இருப்பின், பணியாற்றிய துறை மற்றும் எந்த அலுவலர் மூலம் குறை நிவர்த்தி செய்யப்பட வேண்டும் போன்ற விவரங்களை தெளிவாக குறிப்பிட்டுள்ள தங்களது மனுவினை இரண்டு பிரதிகளில் மாவட்ட கலெக்டர், மாவட்ட கலெக்டர் அலுவலகம், பல்லடம் சாலை, திருப்பூர் 641601 என்ற முகவரிக்கு 15.11.2022 அன்று மாலைக்குள் கிடைக்கும்படியாக நேரிலோ அல்லது அஞ்சல் வழியாகவோ அனுப்பி வைக்கலாம். மாநகராட்சி மூலம் ஓய்வூதியம் பெறுபவர்கள் மேற்காணும் கூட்டத்தில் விண்ணப்பம் அளிக்க இயலாது என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் ஓய்வூதியதாரர் அவர்தம் கோரிக்கைகளை சங்க கடிதம் மூலம் அல்லாமல் நேரடியாக விண்ணப்பம் அளிக்க வேண்டும் என இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது. இத்தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்