search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெள்ளகோவில் முருகன் கோவில்களில் பங்குனி உத்திர வழிபாடு
    X

    பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்ற காட்சி.

    வெள்ளகோவில் முருகன் கோவில்களில் பங்குனி உத்திர வழிபாடு

    • பாலமுருகனுக்கு சந்தனம், தேன், பன்னீர், மலர், விபூதி, கனி உள்ளிட்ட 21 அபிஷேகங்கள் நடைபெற்றன.
    • பாலாபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் உப்புபாளையம் ரோடு, முத்துக்குமார் நகரில் உள்ள பாலமுருகனுக்கு பங்குனி உத்திரத்தையொட்டி நேற்று முன்தினம் திங்கட்கிழமை காலை கொடுமுடி சென்று தீர்த்தம் எடுத்து வந்து நேற்று செவ்வாய் கிழமை மாலை பாலமுருகனுக்கு சந்தனம், தேன், பன்னீர், மலர், விபூதி, கனி உள்ளிட்ட 21 அபிஷேகங்கள் நடைபெற்றன. அதை தொடர்ந்து பாலாபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு கலை நிகழ்ச்சி நடைபெற்றன. இதற்கான ஏற்பாடுகளை முத்துகுமார் நகர் மற்றும் சுற்றியுள்ள பொதுமக்கள் செய்திருந்தனர்.

    அதேபோல் எல்.கே.சி. நகரில் உள்ள பாலமுருகனுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    Next Story
    ×