search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெள்ளகோவில் அருகே அளவுக்கு மீறி மது குடித்தபெயிண்டர் பலி
    X

    கோப்புபடம்

    வெள்ளகோவில் அருகே அளவுக்கு மீறி மது குடித்தபெயிண்டர் பலி

    • வெள்ளகோவில் அருகே உள்ள ராமலிங்கபுரம் பகுதியை சேர்ந்த சந்திரகுமார்
    • சாப்பிட்டு விட்டு வீட்டின் முன்பு படுத்திருந்ததாக தெரிகிறது

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் அருகே உள்ள ராமலிங்கபுரம் பகுதியை சேர்ந்த சந்திரகுமார் (வயது 29) என்பவர் தனியாக ஒரு வீடு வாடகைக்கு எடுத்து, அதில் தங்கி கொண்டு பெயிண்ட் அடிக்கும் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று சந்திரகுமார், அளவுக்கு மீறி மது குடித்துவிட்டு, சாப்பிட்டு விட்டு வீட்டின் முன்பு படுத்திருந்ததாக தெரிகிறது. பின்னர் அடுத்த நாள் காலையில் பார்க்கும்போது சந்திரகுமார் தான் படுத்திருந்த திண்ணையில் இருந்து கீழே விழுந்து கிடந்துள்ளார். அப்போது அருகில் இருந்தவர்கள் சென்று பார்த்துள்ளனர். இந்நிலையில் சந்திரகுமார் மூச்சு பேச்சு இன்றி கிடந்துள்ளார். பின்னர் அவரை பரிசோதித்து பார்த்தபோது அவர் இறந்துள்ளது தெரிய வந்தது. அளவுக்கு மீறி மது குடித்து விட்டு இறந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×