search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சித்திரை தேர்த்திருவிழாவையொட்டி அவினாசிலிங்கேஸ்வரர் கோவிலில்   தெப்பத்தேர் பவனி இன்று இரவு நடக்கிறது
    X

    தெப்பம் கட்டுமானம் நடைபெறும் காட்சி

    சித்திரை தேர்த்திருவிழாவையொட்டி அவினாசிலிங்கேஸ்வரர் கோவிலில் தெப்பத்தேர் பவனி இன்று இரவு நடக்கிறது

    • பதிகம் பாடி உயிருடன் மீட்ட வரலாறும் உடைய சிறப்பு பெற்றது
    • சித்திரை மாதம் தேர்த்திருவிழா நடைபெறும்.

    அவினாசி :

    திருப்பூர் மாவட்டம் அவினாசியில் கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்றதும், முதலை விழுங்கிய சிறுவனை சுந்தரர் பதிகம் பாடி உயிருடன் மீட்ட வரலாறும் உடைய சிறப்பு பெற்றது அவினாசி லிங்கேஸ்வரர் கோவில். இவ்வாறு பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் தேர்த்திருவிழா நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டு கடந்த மாதம் 25-ந்தேதி கொடியேற்ற நிகழ்ச்சியுடன் தேர்த்திருவிழா தொடங்கியது. கடந்த 29-ந்தேதி இரவுபஞ்ச மூர்த்திகள் புறப்பாடு, 63 நாயன்மார்கள் காட்சி அளித்தல் ஆகியவை நடந்தன. கடந்த 2-ந்தேதி மற்றும் 3-ந்தேதி பெரிய தேர் இழுக்கப்பட்டது. 4-ந்தேதி சிறிய தேர் (அம்மன் தேர்) இழுக்கப்பட்டது. நேற்று பரிவேட்டை நிகழ்ச்சி நடந்தது.இன்று(சனிக்கிழமை) இரவு அவினாசி லிங்கேஸ்வரர் கோவில் எதிரில் உள்ள தெப்பக்குளத்தில் தெப்பத்தேர் பவனி நடைபெறுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் பெய்த மழை காரணமாக கோவில் தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரம்பி அதிக அளவில் உள்ளது.

    தெப்பத்தேர் நிகழ்ச்சி மாலையில் நடை பெறுவதால் பக்தர்கள் வெள்ளம் கட்டுக்கடங்காமல் குளத்தில் இறங்கி படிக்கட்டுகளில் அமர்ந்து, தெப்ப தேரில் சுவாமி வலம் வருவதைக் காண்பர்.தற்போது குளத்தி ல் தண்ணீர் அதிகமாக நிரம்பியுள்ளதால் அதிக பட்சமாக ஒரு வரிசை யில் உள்ள படியில் மட்டுமே அமர்ந்து தரிசனம் செய்யும் நிலையில் உள்ளது. இதனால் தீய ணைப்பு படையினர் மற்றும் போலீசார், தெப்ப க்குளத்தின் உள்பகுதி யில் பக்தர்களுக்கு அனுமதி வழங்காமல் தகுந்த பாதுகாப்பு முன்னேற்பா டுகளை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்ப ட்டுள்ளது.

    Next Story
    ×