search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முன்னாள் ராணுவ வீரர்கள் நலச்சங்கம் சார்பில் உடுமலையில் சுதந்திர தின விழா
    X

     சுதந்திர தின விழா நிகழ்ச்சி நடைபெற்றக் காட்சி. 

    முன்னாள் ராணுவ வீரர்கள் நலச்சங்கம் சார்பில் உடுமலையில் சுதந்திர தின விழா

    • நிகழ்ச்சிக்கு வங்கி முன்னாள் ராணுவ வீரர் பாதுகாவலர் நடராஜ் தலைமை வகித்தார்.
    • இந்திய அரசு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கியுள்ளது.

    உடுமலை:

    உடுமலை முன்னாள் ராணுவ வீரர் நலச்சங்கம் சார்பில் உடுமலை நேதாஜி மைதானத்தில் சுதந்திர தின கொடியேற்று விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு முன்னாள் ராணுவ வீரர் சங்க தலைவர் ராமலிங்கம் தலைமை வகித்தார். டாக்டர் பாலகுமார் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். இதில் நாயப் சுபேதார் நடராஜ் தலைமையில் ராணுவ அணிவகுப்பு நடந்தது.

    தொடர்ந்து உடுமலை பாரத ஸ்டேட் வங்கியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு வங்கி முன்னாள் ராணுவ வீரர் பாதுகாவலர் நடராஜ் தலைமை வகித்தார். வங்கி முதன்மை மேலாளர் ராபின்சன் தேசிய கொடி ஏற்றி வைத்து முன்னாள் ராணுவ நல சங்க அணிவகுப்பை ஏற்றுக் கொண்டார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முன்னாள் ராணுவ வீரர்கள் ,வங்கி பாதுகாவலர்கள் மதன் கோவிந்தராஜ், செல்வராஜ், நந்தகோ பால்,விஜயகுமார் ஆகியோர் செய்து இருந்தனர்.

    1971 ல் இந்தியா- பாகிஸ்தான் போரில் கலந்து கொண்டு வெற்றியடைந்ததற்காக இந்திய அரசாங்கம் அழகிரிசாமி மற்றும் முத்துக்காளை அழகுராஜ், சந்திரசேகர் ஆகியோருக்கு இந்திய அரசு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கியுள்ளது. இவர்களுக்கு வங்கி சார்பில் பாராட்டி பரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து லெப்டினன்ட் சுபாஷ் ரேணுகா தேவி அறக்கட்டளை வளாகத்தில் சுதந்திர தின கொடி ஏற்றப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு ராணுவ வீரர் நலச்சங்க தலைவர் ராமலிங்கம் தலைமை வகித்தார். சுபாஷ் ரேணுகா தேவி அறக்கட்டளை நிறுவனர் செல்வராஜ் நாயப் சுபேதார் நடராஜ் மற்றும் ராணுவ வீரர்கள் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு தேசிய கொடி ஏற்றி வைத்தனர். இதில் டிரஸ்டிகள் கணேசன், பாலமுருகன், முன்னாள் ரோட்டரி சங்க நிர்வாகிகள் ரவி ,ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் சத்யம் பாபு ,சைனிக் பள்ளி சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    உடுமலை உழவர் சந்தை எதிரில் உள்ள முழு நேர கிளை நூலகம் எண் இரண்டில் நூலக வாசகர் வட்டத்துடன் இணைந்து முன்னாள் ராணுவ வீரர்கள் கொடியேற்றினர். இதில் பணி நிறைவு நூலகர் கணேசன், நூலகர்கள் மகேந்திரன், பிரமோத் மற்றும் நூலக வாசகர் வட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    ருத்தரப்பா நகரில் உள்ள நடுநிலைப்பள்ளியில் நடந்த கொடியேற்று விழாவில் நகராட்சி துணைத் தலைவர் கலைராஜன் தலைமை வகித்து தேசிய கொடி ஏற்றி வைத்து ராணுவ வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சியில் முன்னாள் ராணுவ வீரர் நலச்சங்க செயலாளர் சக்தி ,செயலாளர் சிவக்குமார், துணைத்தலைவர் சுபேதார், மேஜர் கோவிந்தராஜ் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×