search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்லடம் அருகே ஆம்னி வேன்- லாரி மோதல்
    X

     சரக்கு லாரி -ஆம்னி வேன் மோதிய காட்சி.

    பல்லடம் அருகே ஆம்னி வேன்- லாரி மோதல்

    • குடும்ப நிகழ்ச்சிக்காக கோவையிலிருந்து கரூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
    • பயணம் செய்த 6 பேருக்கும் காயங்கள் ஏற்பட்டது.

    பல்லடம் :

    கோவை பீளமேடு பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவரது மனைவி சசிரேகா( வயது 57). இவரது மகன் சோமுகுமார்(38). இவரது மனைவி மகாலட்சுமி(27) .இவர்களது குழந்தை கிருத்திக் மற்றும் பிரணவ்(13) ,ரித்திக்(11) . இவர்கள் ஒரு ஆம்னி வேனில், உறவினர் வீட்டு குடும்ப நிகழ்ச்சிக்காக கோவையிலிருந்து கரூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

    ஆம்னி வேன் பல்லடத்தை அடுத்த மாதப்பூர் சோதனை சாவடி அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிரே கேரளாவிற்கு செல்வதற்காக வந்த சரக்கு லாரி மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் ஆம்னி வேனின் முன் பகுதி அப்பளமாக நொறுங்கியது. இதில் பயணம் செய்த 6 பேருக்கும் காயங்கள் ஏற்பட்டது. அவ்வழியே சென்றவர்கள் இந்தவிபத்து குறித்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவர்களை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் அனைவரும் சிறு,சிறு காயங்களுடன் உயிர்தப்பினர். இந்த விபத்து குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    Next Story
    ×