என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சிக்கண்ணா கல்லூரி சார்பில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
- போசன் மா விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
- துரித உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும்.
திருப்பூர் :
மத்திய அரசின் அறுவுறுத்தலின் படி திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 சார்பாக ஊட்டச்சத்து பற்றிய விழிப்புணர்வு பல்வேறு பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக தத்தெடுத்த கருமாபாளையம் கிராமத்தில் போசன் மா விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக கருமாபாளையம் ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் சண்முகசுந்தரம் கலந்து கொண்டார். அவர் கூறுகையில், அனைவரும் சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும். துரித உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும். நமது உடல் ஆரோக்கியம் மிகவும் முக்கியம். நெகிழி பைகளில் சூடான உணவு பொருட்களை வாங்க கூடாது. ஏனெனில் அதில் உள்ள நச்சுத்தன்மை உணவுடன் வினைபுரிந்து கெடுதல் ஏற்படுத்தும்.
சத்தான உணவுகளான கீரைகள், பழங்கள், காய்கறிகளை அன்றாடும் சாப்பிடும் உணவில் சேர்க்கவேண்டும். நோய் வராமல் தடுக்க பாரம்பரிய உணவுகளை உட்கொள்ள வேண்டும். ஊட்டச்சத்து பற்றாக்குறை இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என அறிவுறுத்தினர். பிறகு மாணவ செயலர்கள் சுந்தரம், அருள்குமார், பூபதிராஜா, ரமேஷ், அரவிந்தன் ஆகியோர் தலைமையில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு நடனம் நடத்தியும், வீடுவீடாக சென்று விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கியும், ஊட்டச்சத்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்