

திருப்பூர்:
திருப்பூர், ஈரோடு, உடுமலை, கோபி, ஊட்டி ரோட்டரி சங்கங்கள், கோவை, கேரளம் மாநிலத்தின் சில மாவட்டங்கள் உள்ளடக்கிய ரோட்டரி மாவட்டம் ஆகியவை சார்பில் உலக அமைதி, வறுமை ஒழிப்பு, தரமான கல்வி மேம்பாடு, போலியோ ஒழிப்பு, சுற்றுசூழல் பாதுகாப்பு உள்ளிட்டவை வலியுறுத்தி அமைதி ஜோதியுடன் சைக்கிள் பேரணி ஈரோடு மாவட்டம் கோபியில் துவங்கி கோவை சென்றது. அவிநாசி வழியாக வந்த இப்பேரணிக்கு ரோட்டரி சங்கம் மற்றும் பொதுமக்கள் சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது