வருமுன் காப்போம் திட்ட இலவச மருத்துவ முகாம் - நாளை நடக்கிறது

முகாமிற்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை தாங்குகிறார். பல்வேறு நோய்களுக்கு இலவசமாக மருத்துவ பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கி மருந்து, மாத்திரைகள் வழங்குகின்றனர்.
கோப்புபடம். 
கோப்புபடம். 
Published on

முத்தூர்:

முத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட இலவச சிறப்பு மருத்துவ முகாம் வள்ளியரச்சல் ஊராட்சிக்குட்பட்ட வ.கணபதிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கிறது.முகாமிற்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை தாங்குகிறார்.

முகாமை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைக்கிறார்.முகாமில் மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர்.க.ஜெகதீஷ் குமார் அறிவுரையின்படி வெள்ளகோவில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.ராஜலட்சுமி தலைமையில் முத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள், செவிலியர்கள் குழுவினர் நோயாளிகள்,கிராம பொதுமக்களுக்கு பல்வேறு நோய்களுக்கு இலவசமாக மருத்துவ பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கி மருந்து, மாத்திரைகள் வழங்குகின்றனர்.

முகாமில் மேல் சிகிச்சை, அறுவை சிகிச்சைக்கு தேர்ந்தெடுக்கப்படும் நோயாளிகள் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் உரிய சிகிச்சை பெற மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com